ஒரு கவிதை போட்டி..சில கோணங்களில் காதல்… March 13, 2009
Posted by anubaviraja in தமிழ், பிடித்தவை.14 comments
ஒரு கவிதை போட்டி நடந்துசிங்க.. நானும் கலந்துகிட்டேன் . தலைப்பு “காதல்” .. அட நமக்கு சம்மந்தம் இல்லாம இருக்கேன்னு விடாம சில கவிதைகள் எழுதினேன் . எப்படி இருக்குன்னு சொல்லுங்க . நானே சொந்தமா எழுதுனதுங்க .. மண்டபத்துல யாரோ எழுதினது இல்லை 🙂
காதல் ரசிப்பதில்லை…
காதலர்களை கண்டாலே பிடிப்பதில்லை…
எனக்கு ஒரு காதலி கிடைக்காததால் ….
—————————
பசி எடுப்பதில்லை, தூக்கம் வருவதில்லை,
ஒரு புறம் மட்டும் எப்பொழுதும் வலி,
எனக்கிருப்பது காதலா…. அல்சரா….?
————————-
கவிஞர்களை உன்னைப் பற்றி புலம்பச் செய்தாய், விஞ்ஞானிகளை உன் பின்னே சுற்ற வைத்தாய்,
மாதம் ஒரு முறை மட்டும் உன் முழுமுகம் காட்டி,
என்னையும் ஏன் வாடச் செய்தாய்? – நிலாப் பெண்ணே என்று சொன்னதாலா?
—————————-
“காதலித்துப் பார்” கவிஞன் சொன்னான்
காதல் செய்தேன், தாடையை உடைத்தான்
காதலித்தது அவன் மகளை என்பதால்…
——————————-
என்னை சுடர் மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்!!
அழகிய மங்கையரை கண்டு விட்டால் காதல் வராமல்
“காதல்” , “சுப்ரமணியபுரம்” கிளைமாக்ஸ் ஞாபகம் வருகிறதே!!!
——————————-
பெண்ணே உன்னை ஏன் அழகு செய்கிறாய்??
ஒப்பனையற்ற உன் முகமொன்று போதுமே
காதல் என்ற சொல்லே எனக்கு வெறுத்துப் போக….
———————————
பிற உயிர் வதைக்க பயந்து சைவமனேன்
பின்னெப்படி என்னுயிர் வதைத்து நானும்
காதல் செய்வேன் ??
———————————
பேருந்து நிறுத்தம் பயணியருக்கே!!
கடற்கரை எங்கள் பொழுது போக்கிற்கே!!
காதலர்களிடம் இருந்து மீட்க போராடுவோம்!!
——————————
காதலும் தலிபானும் ஒன்று தானோ ??
வளர்க்கும் வரை நன்றாய் இருந்து
வளர்ந்த பின்னே இதயம் நொறுக்குவதால்…
—————————-
400 ரூபாய் விலையில் காதலிக்கு பீட்சா,
ஒரு ரூபாய் அரிசி வாங்க,
ரேசன் கடை வாசலில் தாய்
———————————
காதலிக்கத் தொடங்கியதும் நிலவையும் முகிலையும் நேசிக்கிறிரே ,
உங்கள் பெற்றோரையும் கொஞ்சம் நேசித்துத் தான் பாருங்களேன் !
முதியோர் இல்லங்களவது காலியாகும் .
——————————–
காதலும் வீரமும் கலந்தது தானே தமிழனின் வாழ்க்கை,
பிறகு ஜனவரி 14 மறந்து பிப்ரவரி 14 மட்டும் ஏன்
இன்றைய தமிழனின் கண்ணில் பட்டுத் தொலைக்கிறது…
ஒரு வாட்டர் கேன் காலியகிறது March 1, 2009
Posted by anubaviraja in சினிமா, தலை, நகைச்சுவை, நடந்தவை.2 comments
ஆபீஸ்ல நடந்த ஒரு அனுபவத்தை இப்படி கூட சொல்லுவோம்ல…..
வடிவேலு “கிரி” படத்தில் பேசுவது போல் வாசிக்கவும்)
நான் சரி 11 மணி ஆச்சே பிரேக் தானேன்னு Reception கிட்ட போனேன்
அங்க 5 பேரு மா..
வாட்டர் மிஷன் முன்னாடி தண்ணி குடிக்க நின்னுக்கிட்டு இருக்காங்க…. வாட்டர் கேன் காலி ஆயிரிச்சி .
என்னால முடிஞ்ச வரைக்கும் Try பண்ணினேன் கேன் எடுக்க 4வது மாடிக்கு போங்கன்னு சொன்னானுக…
சரின்னு நானும் நம்பி 4வது மாடிக்கு போயி கேன் எடுத்துட்டு வந்து வாட்டர் மிஷன்ல போட்டுட்டேன் .
அங்க 8 பேரு மா..
அவுங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளோ வாட்டர் கேன் லையும் .. தண்ணி பில் பண்ணிகிடங்க
திடீர்ன்னு ரவி சார் இளங்கோ வுக்கு போன் போட்டு
Free யா இருந்தா வாப்பா இங்க ராஜா சிக்கி இருக்கான்னு பாட்டில் ல வாட்டர் பிடிச்சிக்கலாம்னு சொன்னாரு. அடுத்த கேன் உம் காலி….
நானும் எவ்ளோ நேரம்தான் வாட்டர் கேன் ஈசியா தூக்குறது மாதிரி நடிக்கிறது?
நானும் ஒன்னும் சொல்லாமலே அடுத்த Can எடுத்து போட்டுட்டேன்..
அப்போ ஹேமா கேட்டாங்க .. “ஒண்ணுமே சொல்லலியா ஏன்” ?
அதுல புனித் சார் சொன்னாரு எத்தனை வாட்டர் கேன் மாத்த சொன்னாலும் சமாளிக்கிறான் டா
இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான் மா!
வைப்பற்றங்கரையிலிருந்து கூவம் நதியோரம் வரை…. March 1, 2009
Posted by anubaviraja in சினிமா, நடந்தவை.Tags: எம் மகன், கதை, கூவம், சாத்தூர், வாழ்க்கை, வைப்பற்றங்கரை, yes we can
7 comments
எல்லோர்க்கும் வணக்கம். ஒரு கதை சொல்லலாம்னு இருக்குறேன் ( அட கதைனதுமே எந்திரிச்சி போகப்டாது ). இது ஒரு வாழ்க்கை STD ( STD னா வரலாறு தான? ) .
என்னோட வாழ்கைய பத்தி உங்க கிட்ட பகிர்ந்துக்க ஆசை படுறேன். சாத்தூர் .. சிவகாசி பக்கத்துல கிராமம்னும் சொல்ல முடியாம நகரம்னும் சொல்லமுடியாத ஒரு டவுன். வெயில் படத்துல வரது எங்க ஊரோட சுற்று வட்டாரம் தான். தீப்பெட்டி, பட்டாசு, இது ரெண்டு மட்டும் தான் எங்க ஊரோட பிழைப்புக்கான வழி.
15 வயசு வரைக்கும் என்னோட வாழ்க்கை மிக மிக ஆனந்தமா போய்கிட்டு இருந்திச்சி. நாடக மேடைகள் ,கவிதை போட்டிகள், பட்டிமன்றம் , கட்டுரை எழுதுவது அப்படின்னு ஒரு மெட்ரிகுலேசன் ஸ்கூல் பையன் செய்ய கூடாத வேலைல எல்லாம் ஆர்வமா இருந்தேன்.
ஒன்பதாம் வகுப்பு முடிச்ச உடனே ரிசல்டும் கூடவே வந்தது கிளாசிலேயே 3rd ரேங்க் வாங்கி இருந்தேன். முதல் சோகம் ஆரம்பித்தது. அப்பாவுக்கு மளிகை கடைல 5 லட்ச ருபாய் நஷ்டம். மற்ற ஆட்களை கல்லாவில நம்பி விட்டுட்டு போனதுனால…
ரெண்டாவது சோகம்.. படிப்ப நிப்பாட்டிட்டு கடைக்கு வேலைக்கு போனேன். ஆரம்பத்துல ரொம்ப கஷ்டமா தான் இருந்திச்சி. அப்புறம் சரி இது ஒரு சவால் அப்படின்னு நெனைச்துகப்புரம் வாழ்க்கை அமைதியா போய்கிட்டு இருந்தது.
எங்க அப்பா வியாபாரத்தில ரொம்ப திறமைசாலி. பேச ஆரம்பிச்சாங்க னா நீங்க அந்த பொருளை வாங்காம போக மாட்டிங்க. பட் ரொம்ப கோபம் ஜாஸ்தி. “எம் மகன்” படத்துல வர நாசர் கேரக்டர். அந்த படம் என்னோட லைப்… அந்த டைரேக்டருக்கு என்னோட கதை எப்படி தெரியும்னு தெரியல . ( பரத் பல காட்சிகள்ல அவமான படுறது , அம்மா கரெக்டர் நாசருக்கு பயபடுறது , இளைய தாய் மாமா வந்து கொஞ்ச நாள் கடைய பார்த்துகிட்டது, அப்பாவுக்கு பிடிக்காத மாமா விட்டுக்கு நானும் அம்மாவும் ஒளிஞ்சு ஒளிஞ்சு போயிடு வந்தது … எல்லாம் என்னோட வாழ்க்கை ) என்ன… கோபிகா கேரக்டர் மட்டும் ஏன் லைபில இல்லை ??? 🙂
எனக்கு படிக்கிரதுனா ரொம்ப பிடிக்கும் அதுனால எப்டியாவது படிச்சே ஆகனும்னு யோசிச்சேன். அப்போ தான் கிடைச்சது ப்ரைவேடா 10 th அப்புறம் +2 எளுதலம்ங்க்ற ஐடியா. சரின்னு படிக்க ஆரம்பிச்சேன். கடையில கூட்டம் இல்லாத நேரம் படிப்பு தான் 🙂
அப்புறம் நைட் கூட 11 மணிக்கு பிறகு கடை பூட்டிட்டு வந்து படிக்குறது.
10 th அப்புறம் +2 ஓரளவு நல்ல மார்க் எடுத்தே பாஸ் பண்ணிட்டேன். கடையும் நல்ல படியா போக ஆரம்பிச்சது. கடன் எல்லாம் அடைய ஆரம்பிச்சது. சரி அப்படியே BBA மதுரை காமராஜ் university ல தபால் மூலமா படிக்க ஆரம்பிச்சேன். அதயும் முடிச்சி MBA வும் முடிச்சிட்டேன், எங்க கடையும் நல்ல படியா வந்துருச்சி.
10 வருஷ மளிகை கடை அனுபவம் Distance education ல கிடைச்ச MBA டிகிரி , இதோட சென்னைக்கு ட்ரைன் ஏறி வந்தேன். வேலை கிடைக்கலைனா மளிகை கடை வச்சி பிழைச்சிக்கலாம் இல்லையா ? 🙂
என்னோட பெரியம்மா பையன் (He is My god or God father ) நம்பிக்கை ஏற்படுத்தி என்னை சென்னையில வாழ வைத்தான்.
அதனால (நீதி சொல்லுற நேரம் வந்துரிச்சி 😉 ) முடியாதுன்னு நெனைச்சிருந்தா நான் இன்னிக்கும் மளிகை கடையில பொட்டலம் மடிச்சு கிட்டு இருந்திருப்பேன்.
அதுனால ஒபாமா சொன்ன மாதிரி “yes we can” அப்டின்னு நெனைப்போம். கலாம் சொன்ன மாதிரி கனவு காண்போம்.
(காமெடியா தான் ஆரம்பிச்சேன் ஆனா முடியல 🙂 )
நான் பெரிசா எதுவும் சாதிக்கலை . என்னோட வாழ்கைல துன்பம் வந்த பொழுதெல்லாம் “I Just stayed Positive” . மற்றதெல்லாம் தானா நடந்தது. இந்த ஒரு விசயத்த என்னோட நண்பர்கள் கிட்ட பகிர்ந்துக்க நெனச்சேன் அது நாலா தான் போஸ்ட் பண்ணினேன்.
ஆனா என்னோட அப்பாவ ஒரு பெரிய வில்லனா காட்டி இருந்துச்சின்னா , அது உண்மை கிடையாது. அவரு ஒரு நேர்மையான, இரக்கமுள்ள, 3 தடவை பிச்னஸ்ல தோற்று நாலாவது தடவை ஜெயிச்ச ஒரு முன்கோபகார ஆசாமி. “Many good things that I have, I have learn from him”. ( என்ன, குடுத்த வாக்கையும் குடுத்த கடனையும் திருப்பி வாங்குற பழக்கம் இல்லாததுனால 3 தடவை பிச்னஸ்ல லாஸ் 🙂 )