jump to navigation

காதல் போயின்.. March 23, 2011

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
Tags: , ,
6 comments

கண் நிறைய உன் புன்னகை, கணக்கு பாடத்தில் கோட்டை
அடுத்து பாத்துக்கலாம் டே”  உறுதி சொல்லும் மாமன்

தலையில் முட்டிய நிலை, “பார்த்து போ ராசா”  பதறும் பெரியம்மா

உன் நினைவில் உணவு விழுங்கி புரை ஏறி – “எய்யா பதறாம..” எனும் தாய்

உன்னை கேலி செய்தவனின் கை உடைத்து, கம்பிகளின் பின்னின்ற எனக்காய் கூனிக்குறுகி கையொப்பமிட்ட தந்தை

கோடை மழை இடியென தாக்கிய உன் கேள்வி
நானா? உன் குடும்பமா?

இவர்தமை விடுத்து உன்னை வந்து சேர்ந்து…
பிற வேடிக்கை மனிதரை போல் வீழ்வேன் என்று நினைத்தாயோ?