jump to navigation

21-12-12 உலகம் ஏன் அழியவில்லை என்றால்…. December 21, 2012

Posted by anubaviraja in அரசியல், எதுலயும் சேராது, சினிமா, சென்னை, தமிழ், தலை, நடந்தவை, பிடித்தவை, புத்தகம், மதுரை, ரசித்தவை.
Tags: , , , , , , , , , , , , , ,
4 comments

100_post

உலகம் அழியிர விஷயம் ஒரு ஓரமா கெடக்கட்டும்… இப்போ நான் சொல்ல வர்ற முக்கியமான விஷயம் என்னன்னா …இது என்னோட நூறாவது பதிவு…. அட ஆமாங்க … நானும் செஞ்சுரி அடிச்சிட்டேன் ! 🙂 🙂 🙂 2008 டிசம்பர் மாசம் .. கிட்டத்தட்ட நாலு வருஷம் முன்னாடி விளையாட்டு போக்கில எழுத ஆரம்பிச்ச ஒரு விஷயம்… இப்போ நூறு பதிவு அப்படிங்கறது… எனக்கே கொஞ்சம் வியப்பா தான் இருக்கு … இத விட அதிகமா நான் எழுதிருக்க முடியும்… எல்லாம் இந்த வேலை பளு, மின்சாரமின்மை, சோம்பல், இப்படி பல்வேறு காரணங்களால் ஏதோ.. இப்போ தான் முட்டி மோதி ஒரு நூறு பதிவுக்கு வந்திருக்கேன்..

என்னோட பெரும்பாலான பதிவுகள் நகைச்சுவை பதிவுகளா தான் இருக்கும்… ஏன்னா பேசிக்கல்லி நாம காமெடி லைக் பண்றதால கூட இருக்கலாம் … நம்ம பதிவுகள்ள ரொம்பஅதிகமா ஹிட் அடிச்சது.. நம்ம தலைவர் பவர் ஸ்டார் தான்… அந்த டாப் பத்து பதிவுகள்…இதோ உங்கள் பார்வைக்கு …

 

(more…)

தமிழ் நாடே பத்தி எரியும் .. தலைவர் போஸ்டர் மேல கை வச்சிட்டிங்கல்ல?? August 1, 2011

Posted by anubaviraja in அரசியல், செய்திகள், தலை, நகைச்சுவை, நடந்தவை, மதுரை.
Tags: , , , ,
8 comments

இது வரைக்கும் எந்த ஒரு கட்சியும் செய்யாத ஒரு காரியம் … பெட்ரோல், டீசல், விலை உயர்வ கண்டிச்சி போராட்டம் அறிவிச்ச ஒரே கட்சி … அது நம்ம லதிமுக தான் ….

(more…)

பத்தாயிரம் ரூபாய் கட்டும் – பத்து வயசு பையனும் May 13, 2011

Posted by anubaviraja in குட்டி கதைகள், தமிழ், நகைச்சுவை.
Tags: , , , , ,
2 comments

குட்டி கதை சொல்லி ரொம்ப நாள் ஆகி போச்சி , இன்னிக்கு கண்டிப்பா சொல்லி தான் ஆகணும் … மேல படிங்க … (அட மேலன்னா மேல பார்க்கப்டாது… )

ஒரு ஊருல ஒரு பேங்க் இருந்திச்சாம் .. அந்த பேங்க்ல பணம் கட்ட போன ஒருத்தர் அவரோட பையனையும் கூட கூட்டிட்டு போயிருக்கார்

அந்த பய திடீர்னு – ” இங்க யாரவது செகப்பு ரப்பர் பேண்ட் மாட்டின ருபாய் கட்ட கீழ போட்டிங்களா?? ” அப்படின்னு அபல குரல் எடுத்து கூவினான்….

சரி குழந்த பய தான அப்படின்னு நம்ம்ம்பி… ஒரு நாலு பேரு கைய வேற தூக்கிட்டாங்க ….

அந்த பய அப்புறம் என்ன சொன்னான் தெரியுமா ??

“அந்த செகப்பு ரப்பர் பேண்ட் என் கிட்டதான் இருக்குன்னு ”  சொல்லிட்டான்மா… 😦 😦

விஷம் விஷம் ……

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் … இந்த கதைய நமக்கு SMS அனுப்பினது அருமை தம்பி மாதேஷ் தான்…. அதுனால எல்லா புகழும் அவருக்கே ….

நானும் பிரபல பதிவர் தான்… நானும் பிரபல பதிவர் தான் December 2, 2010

Posted by anubaviraja in செய்திகள், நகைச்சுவை, நடந்தவை.
Tags:
5 comments

இதுநாள் வரைக்கும் நானும் சும்மா பொழுது போக்கா தான் ப்ளாக் எழுதிகிட்டு இருந்தேன் .. தம்பி மாதேஷ் – என்னையும் மதிச்சு அவரோட ப்ளாக்ல  எழுதுறதுக்கு பெர்மிஷன் குடுத்தாரு … நாம யாரு .. ஆப்பிள் iPhone பேன் பசங்க பத்தி ஒரு ப்ளாக் எழுதிட்டோம்ல….

நீங்களே  படிச்சி பாருங்க 🙂 🙂

 

 

நாளை சந்திப்போமா ?? 😀

லாப் டாப் களவாணியும்.. அவனோட நேர்மையும்.. November 11, 2010

Posted by anubaviraja in செய்திகள், தமிழ், நடந்தவை.
Tags: , , , ,
3 comments

மக்கா ரொம்ப நாள் ஆச்சி உங்கள எல்லாம் சந்திச்சி .. அதுனால இனிமே அடிக்கடி மீட் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

இங்க ஊருக்குள்ள எல்லா பயலுகளும் செல் போன் வச்சிருக்குற மாதிரி பாரின்ல எல்லா பக்கிகளும் லாப் டாப் வச்சி கிட்டு தான் அலையுவங்க . இங்க கூட நெறைய ஐ டி கம்பனில எல்லார் தலையிலையும் ஒன்னொன்னு கட்டி விட்டுடுறாங்க . அத போற்றி பாதுகாக்குரதுகுள்ள எல்லாரும் கண்ணு முழி பிதுங்கி அலையிறாங்க 😉 நம்ப ஊருல தான் திருடர்கள் ஜாஸ்தி ஆச்சே ..

ஆனா வெளி நாட்டுலயும் திருட்டு பசங்க இருக்க தான் செயிரங்க. இப்படி தான் ஸ்வீடன் நாட்டுல ஒரு காலேஜ் ப்ரோபாசர் லாப்டாப்பை ஒரு களவாணி பய ஆட்டைய போட்டுட்டான்… ஆனா பாருங்க பயபுள்ள நேர்மைக்கு பொறந்தவன் போல , லேப்டாப் ல இருந்த முக்கியமான டேட்டா எல்லாத்தையும் பேன் டிரைவ்ல காப்பி பண்ணி அனுப்பி வச்சிருக்கான் ப்பா …

அவன யாராவது ரொம்பபபபபப………. நல்லவன்னு சொல்லிருப்பாங்கலோ???

 

பட் அவனோட நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது . விசயத்த முழுசா  படிக்க இங்க கிளிகுங்கோ

துன்பம் தொலைப்பது எப்படி??? April 30, 2010

Posted by anubaviraja in தமிழ், நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , , , , , , ,
8 comments

திரும்பவும் ஒரு குட்டி கதை… நீ என்ன பெரிய ரஜினியா ?? இல்லை பாக்யராஜா?? ஒரே குட்டி கதையா சொல்லிக்கிட்டு இருக்கியே ? அப்படின்னு கேக்க ப்ப்டாது .. அவங்கள நிறுத்த சொல்லுங்க .. நானும் நிறுத்துறேன் … (எனக்கு SMS அனுப்புரவங்கள சொன்னேன் 😉 )

சரி கதைக்கு  போவோம் … இது கொஞ்சம் வன்முறையான கதை .. அதனால கொஞ்சம் ரத்த வாடை வீசும் .. பரவல்லையா ??? ( பில்ட் அப் போதும் கதைய சொல்லுடா அப்படின்னு சொல்றிங்களா ?? ரைட் ஓகே … )

ஒரு ஊருல  …. (யோவ் .. அப்படி கதை சொல்ல ஆரம்பிக்கிறது தானய்யா உலக வழக்கம் அதுக்குள்ள டென்ஷன் ஆனா எப்படி ??? ) சரி … நான் கண்டினியூ பண்றேன் … ஒரு ஊருல ஒரு பெரிய பேங்க் இருந்திச்சாம் .. அதுல ஏகப்பட்ட பணம் புலன்கிகிட்டு இருந்திச்சாம் .. இத கேள்வி பட்டு அந்த பேங்க் இருக்குல்ல பேங்க் ,… (ஆமாடா .. ஆமா.. அப்ப்டிங்க்ரின்களா ??? .. கொஞ்சம் ஓவரா தான் போய்கிட்டு இருக்கேனோ?? ) ரைட் … பாக் டு தி ஸ்டோரி ….

அந்த திருடன் பேங்க்க கொள்ளை அடிக்க துப்பாக்கியோட உள்ள புகுந்துட்டான் … கிட்டத்தட்ட ஒரு கோடி தேறும் .. கொள்ளை அடிச்சிட்டு திரும்பி போனான் .. அப்ப ஒரு பய புள்ளை கிடு கிடுன்னு நடுங்கிகிட்டு நின்னுகிட்டு இருந்தான்.. திருடன் அவன் கிட்ட வந்தான் … “டே .. நான் இந்த பங்க்க கொள்ளை அடிச்சத பாத்தியா ?? ” அப்படின்னு கேட்டான்..

இந்த பயலுக்கு தான் நாக்குல சனியாச்சே.. “ஆமா பார்த்தேன்னு” சொன்னான் (பெரிய ஹரிச்சந்திரன் வாரிசு 🙂 ) துப்பாக்கிய எடுத்தான் பொட்டுன்னு அவன போட்டு தள்ளிட்டு போய்கிட்டே இருந்தான் ..

அப்புறம் முன்னாடி ஒரு புருசனும் பொண்டாட்டியும் நின்னுக்கிட்டுருந்தாங்க , அவன் நேரா புருசன் காரன்கிட்ட போய் … “யோவ் .. நான் பாங்க கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா ?? ” அப்டின்னு கேட்டான் .. புருசன்காரன் கொஞ்ச நேரம் யோசிச்சான் .. அப்புறம் சொன்னான் ..

“திருடன் சார்…  திருடன் சார்… நான் பாக்கல… ஆனா என் பொண்டாட்டி பார்த்தா… ”

பயபுள்ளை எப்புடி கோர்த்து விட்டான் பார்த்திங்களா ?? அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனை … கல்யாணம் ஆனவனுக்கு அது ஒன்னு தான் பிரச்சனை ;)… மீண்டும் சந்திப்போமா ???

சென்னை அனுபவங்கள் பார்ட்-1 June 21, 2009

Posted by anubaviraja in சென்னை, நடந்தவை.
Tags: , , , , , ,
3 comments

எல்லாருக்கும் வணக்கம் … நான் சென்னை வந்து ஒரு ரெண்டு வருஷம் ஆக போகுது . சரி பயபுள்ள ஊரு  பூராம்   சுத்திருப்பான்னு நிங்களா கற்பனை பண்ணினிங்கனா அதுக்கு நான் பொறுப்பு கெடயாது ஆமாம். நான் சுத்தி பார்த்த எடங்களும் சிச்சிவேசனும் தான் இந்த போஸ்ட்.

மெரினா பீச்:

ஏற்கனவே எட்டங்க்லாஸ் படிக்கும் போது  அம்பது பைசாக்கு ஐஸ்கிரீம்ன்னு  சொல்லி அஞ்சம்பதுன்னு ஏமாத்தின ஏரியா அதுனால இந்த தடவை எச்சரிக்கையா தான் போனேன் . மொத தடவை தனியா போகலையே … அண்ணா சமாதிக்கு பஸ் ஏற போனதோட சரி , பீச் பக்கம் போகலியே , அப்புறம் அண்ணன் (பாலாஜி) , ரூம் மேட் & நண்பர்களோட முதல் தடவை போனேன்.    அப்புறம் நைட் shift பார்க்கும் போது  பாலாஜிக்கும் எனக்கும் shift ஒரே நேரத்துல முடிஞ்சிரும் அடிக்கடிஅதிகாலை அஞ்சி மணிக்கு பீச் லைட் ஹவுஸ் கிட்ட போய் நல்லா பொழுது விடியிற வரைக்கும் நிப்போம் 🙂 .

சமீபத்துல ஒரு தடவை  weekend ரொம்ப போர் அடிச்சி மதியம் 12 மணிக்கு உச்சி வெயிலில  பீச் போனது ஒரு சுவாரசிய அனுபவம் அடுத்த போஸ்ட்ல அத பத்தி பேசலாம்

ஸ்பென்செர் பிளாசா :

எல்லாரும் இங்க எதுக்காக முதல் தடவை போனங்கன்னு எனக்கு தெரியாது , நான் போனது ஒரு இண்டர்வ்யுகாக. எல்லா ரவுண்டும் clear பண்ணி  கடைசில சொதப்பி வேலை வாய்ப்பு போன எடம் . அதுக்கப்புறம் பையில முப்பத்தஞ்சி ருபாய்  மட்டும் வச்சிக்கிட்டு ரெண்டு தடவை ஸ்பென்செர் போயிட்டு வந்துருக்கேன் .

சிட்டி சென்டெர் :

அட என்னப்பா இது , இங்கயும் முதல் தடவை நான் போனது ஒரு கால் சென்டெர்  இண்டர்வ்யுகாக. அதுவும் புட்டுகிசின்னு வச்சிகொங்களேன். சென்னைக்கு வந்த புதுசு அது , இப்படி ஒரு உலகம் இருக்குமான்னு என்னையே கிள்ளி பார்த்துகிட்டேன் . அதுக்கப்புறம் அந்த பக்கம் தலை வச்சி இன்னும் படுக்கலை.

பெசன்ட் நகர் பீச் :

இங்க என்னோட ரூம் மேட் தான் கூட்டிட்டு போனாரு , ஆனா அப்பிடியே பைக்க விட்டு கேள ஏறக்காம கூட்டிட்டு   வந்துட்டாரு . கேட்டா நீ சின்ன பைய்யன் கண்டது கழுதய பாத்து கண்ணுகல கெடுத்துகாதன்னு சொல்லிட்டாரு . அய்யா சென்னைவாசிகளே  அங்க அப்பிடி என்ன தான் நடக்குது ?

மத்த எடங்கள அடுத்த போஸ்ட் ல பார்ப்போமா ?? இப்போதைக்கு ஜூட் 🙂