jump to navigation

கோ கொரோனா கோ.. July 30, 2020

Posted by anubaviraja in Uncategorized.
add a comment

அதாகப்பட்டது கிபி 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கிளம்பிய ஒரு கிருமி சூறாவளி உலகம் சுற்றும் வாலிபனாகி… ஆறே மாதத்தில் பலரின் வாழ்க்கையை புரட்டி போட்டது தங்கள் அறிவீர்கள்.

ஒரு கட்டத்தில் சீனா முதல் இடத்தில் இருந்தது, (வேறென்ன பாதிக்கப்பட்ட மற்றும் இறப்பு விகிதத்தில் தான்) பிறகு அந்த பந்தயம் தென் கொரியா கையில் இருந்து இரான் பக்கம் சென்று .. இத்தாலி பக்கம் ருத்ர தாண்டவம் ஆடி.. உலக வல்லரசு அமெரிக்கா பக்கம் சென்று வென்று லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்று இதிலும் தாங்கள் நம்பர் 1 என்று நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள் ..

நம்ம ஊருக்கு வருவோம், இந்தியாவுக்கு கொரோனா வராது வந்தாலும் வெயிலுக்கு செத்துப் போயிடும் அப்படியே இருந்தாலும் நமக்கு வந்து எதிர்ப்பு சக்தி ரொம்ப ஜாஸ்தி, நொடிக்கு நொடி இப்படி ஒரு கதையை சொல்லி கிட்டு இருந்தோம். கடைசில உங்க பொடனிக்கு பின்னாடி தான் இருக்கிறேன் அப்படின்னு சொல்லி இப்ப நமக்கிடையே வந்துருச்சு.

அரசாங்கம் எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சி எல்லாம் என்ன கண்டிஷன்ல இருக்குதுன்னு யாருக்குமே தெரியல. முழுஅடைப்பு முழு அடைப்புகுள்ள முழு அடைப்பு இப்படியேதான் போய்கிட்டு இருக்கு.

எங்க பார்த்தாலும் முகமூடிகளும், வேலை இல்லா திண்டாட்டமும், இருக்கிற வேலையை விட்டு அனுப்புவது, பள்ளிக்கூடம் செல்லா குழந்தைகளும், ஊரடங்கு… ஊரடங்கு… ஊரடங்கு.. இது மட்டுமே கேட்டுகிட்டு மக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார்கள்

அடித்தட்டு மக்கள் மட்டும் பொழப்ப பார்க்கணும் என்று வேலைக்குப் போறது… வழக்கம் போல வெளியில் சுத்துறது… இப்படியே போய்கிட்டு இருக்காங்க. கொரோனாவுக்கு ஏழை…பணக்காரர் என வித்தியாசம் கிடையாது… மந்திரிக்கும் வரும் ஒரு கூலித் தொழிலாளிக்கு வரும்… இந்துவுக்கும் வரும்… முஸ்லிமுக்கும் வரும்… கிறிஸ்டியன்கும் வரும்.. அமிதாப்பச்சனுக்கு வரும்… பாகுபலி டைரக்டருக்கும் வரும்…

அந்த வகையில் இது ஒரு சமத்துவம் இருக்கிற நோய்தான்..

மக்களெல்லாம் முடக்கிப் போட்டு அரசாங்கங்களை ஸ்தம்பிக்க வைத்து அடுத்து என்ன பண்றதுன்னே தெரியாம குழம்ப வச்சு இந்த கொரோனா 2020அ அள்ளிக்கிட்டு போயிடுச்சு

நிறைய பொருளாதார அறிஞர்கள் சொல்ற மாதிரி 2020 ல இத பண்ணனும் அதை பண்ணனும்னு இருக்காம பிழைத்துக் கிடந்தால் போதும் என்று நினைத்து கொள்ள வேண்டியதுதான் கொண்டிருக்கிறோம்

இதுல இன்னும் பீதியை கிளப்பி விடும் விஷயம் என்னன்னா இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை 2020 முடிய இன்னும் அஞ்சு மாசம் இருக்கு

நாமே பாதுகாப்பாக இருப்போம்… மருத்துவர்கள நம்புவோம்… சமூக இடைவெளியை கடைபிடிப்போம்… கைகளை கழுவுவோம்.. முடிந்தவரைக்கும் வீட்டுக்குள்ளேயே இருந்து பிழைத்து கிடப்போம்…

மற்றும் ஒரு பேருந்து பயணம் September 22, 2019

Posted by anubaviraja in Uncategorized.
1 comment so far

பயணங்கள் மனிதனுக்கு கொடுக்கும் அனுபவங்கள் பெரும்பாலானவை வாழ்க்கை பாடங்கள் தான். காது, கண்களை திறந்து வைத்து கவனித்தால் ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகம். கற்றுக்கொள்ள கோடி உண்டு. இன்றைய அரசு பேருந்து பயணம் அவ்வாறான ஒரு அனுபவமே.குடும்பம் சகிதமாக பயணம், உச்சி வெயில், இடை இடையே மழை சாரலில் நனைத்து பேருந்து விரைந்து சென்று கொண்டிருந்த வேலை.எங்கள் இருக்கைக்கு இடது புறம் 45 வயது மதிக்க தக்க ஒருவர் வந்து அமர்ந்தார். பார்த்த உடனே நட்புடன் பேச கூடிய சுபாவம் போன்ற தோற்றம். என் மகனை ஸ்நேகமாக பார்த்து இரண்டு மிட்டாய்களை கையில் திணித்தார். புன்னகையுடன், நன்றி சொல்லி வாங்கிய போதும் மகனை அந்த மிட்டாயை உடனே சாப்பிட சொல்ல மனம் வரவில்லை. Breaking news அடிக்கடி பார்க்கும்போது ஏற்படும் சக மனிதர் மீது ஏற்படும் அவ நம்பிகை தாம். பாதுகாப்பு காரணம் குறித்து பாண்ட் பையில் அடைக்க பட்டது அந்த மிட்டாய்.பின்னர் என் மகன் கையில் விளையட கொடுக்க பட்டு இருந்த ஓர் வெளிநாட்டு நாணயம், தவறி கீழே விழுந்தது போலும். நாங்கள் யாரும் கவனிக்கவில்லை. திடுமென எங்கள் இருக்கைக்கு பின்னால் அமர்ந்து கொண்டு வந்த ஒருவர், நம்மவரை அழைத்து எங்கள் இருக்கைக்கு அடியில் இருக்கும் ஓர் நாணயத்தை எடுத்து தர வேண்டும் என்று சொல்லுகிறார்.அவரும் அதை எடுத்து கொடுக்க, சட்டென திரும்பிய என் கண்னில் பட்டது அந்த நாணயம்.அந்த நபரை ஒரு நோட்டம் விட்டேன். 40 வயதிருக்கும். நரைத்த சிகை, நெற்றி நிறைய குங்குமம்.. பெரிய மனித தோரணை.. ஏதேனும் பிரச்சனை என்றால் அவமானம் தங்கும் தோற்றம் இல்லை. உள்ளூர ஒரு புன்சிரிப்போடு, அந்த தருணத்தை கடந்தேன்..

(இளிச்சவாய்தனமா? தெரியவில்லை 🙂)

அந்த மனிதரின் நாணயத்தை பாரிசோதித்து அவர் சட்டை பையில் அமைதியாக அந்த வெளிநாடு நாணயம். பிறகு சாப்பிடலாம் என்ற நம்பிக்கையில் என் மகன் பையில் அந்த மிட்டாய்!

அப்பா… June 19, 2017

Posted by anubaviraja in நடந்தவை.
Tags: , , ,
2 comments

12657353_1171948692830135_5029907606615636924_o
சம்பவம் 1 
சமையல் மாஸ்டர்: அண்ணாச்சி, இங்க பாருங்க இந்த கல்யாண சீட்டை உங்க கடைல தான் குடுக்க போறேன்.. எப்படியும் ஒரு ஐயாயிரம் ருபாய் வரும்.. நம்ம கமிஷன பாத்து செஞ்சிருங்க..
அப்பா: இல்லிங்க.. இந்த மாதிரி பழக்கம் நம்ம கடைல கெடயாது

(more…)

ஐஸ் பக்கெட் சேலஞ்.. அப்படின்னா என்னன்னா August 31, 2014

Posted by anubaviraja in நடந்தவை, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
add a comment

என்னடா ஊருக்குள்ள எல்லாரும் ஐஸ் பக்கெட் சேலஞ்….ஐஸ் பக்கெட் சேலஞ்… அப்டிங்ரான்களே.. அதோட எஸ்டிடி (வரலாறு) தெரிஞ்சிக்கணும் ணா..

Amyotrophic lateral sclerosis அப்படின்னு ஒரு நோய்.. அதோட விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டுவதற்கு ஐஸ் பக்கெட் சேலஞ் அப்படின்னு ஒண்ணு கண்டு பிடிச்சி.. இந்த Facebook, Twitter மாதிரியான சமூக வலைதளங்களில் #ALS அப்படிங்கற டாக்ல பரப்ப ஆரம்பிச்சாங்க.. அதாகப்பட்டது சவால் விடுறவர் ஒருத்தர் .. அத ஓபனா யாரவது ஒருத்தருக்கு அனுப்பி வச்சிர வேண்டியது.. ஒண்ணு சவால ஏத்துகிட்டு ஒரு பக்கெட் நெறைய ஐஸ் கட்டி தண்ணி வச்சி தலைல ஊத்தணும்.. இல்லேன்னா அந்த தொண்டு நிறுவனத்துக்கு டொனேஷன் கொடுத்துரணும்..

 

ஜூன் மாச கடைசில ஆரம்பிச்ச இந்த சவால், காட்டு தீ மாதிரி பரவ ஆரம்பிசிச்சி.. ஜார்ஜ்புஷ், கிளிண்டன், காமரூன், இது போன்ற உலக தலைவர்கள் எல்லாம் சவால் ஏத்துகிட்டாங்க, ஒபாமா ஜகா வாங்கிட்டு நூறு டாலர் டொனேட் பண்ணிட்டார் 😉 இருந்தாலும் ஐஸ் பக்கெட் குளிரும்மா இல்லையா ?

(more…)

இரும்புப் பறவையே ..நீயெங்கே? April 1, 2014

Posted by anubaviraja in கவிதை, நடந்தவை.
add a comment

Dark-Sea-550x550

 

வானில் பறந்தாய்.. மாயமானாய்..

கண்டம் தாண்டி போனாயோ?

காட்டில் ஒளிந்துகொண்டாயோ?

வல்லுறு தூக்கிச் சென்றதோ?

கடல்வேந்தன் கூட்டிக்கொண்டானோ ?

றெக்கைகளை எங்கோ மறைத்தாயோ?

(more…)

விழியை விற்று… March 30, 2014

Posted by anubaviraja in Uncategorized.
add a comment

உச்சிப் பொழுதின் நெடுஞ்சாலை பயணம் உணர்த்திச் செல்கிறது…
இருபுறமும் வெட்டப்பட்ட மரங்களின் அருமையை..

image

தெனாலி ராமன் – ட்ரெய்லர்: கைப்புள்ள Comeback! March 29, 2014

Posted by anubaviraja in அரசியல், சினிமா, தலை, நகைச்சுவை, பிடித்தவை.
Tags: , , , ,
3 comments

2011 எலெக்சன்ல தெரியாத்தனமா வாய்ஸ் குடுக்க போய் … நம்ம தலைய ஒரு மூணு வருஷம் வீட்ல சும்மா உட்கார வச்சிட்டாங்க.

 

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை மாதிரி.. யாராரோ காமடி பண்ண முயற்சி பண்றாங்க, அதுல பாருங்க நமக்கு சிரிப்பே வர மாட்டேங்குது.. சந்தானம் இப்போ கொஞ்சம் போர் அடிக்க ஆரம்பிச்சிட்டார் ..  மிக்க ஆவலோட எதிர் பார்த்த ட்ரெய்லர் வந்துரிச்சி..

 

பன்ச் டயலாக் என்னனா …

 

ஒருவன் லட்சியம் நிறைவாகும் வரையிலும் மறைவாக இருப்பது தான் நல்லது.. இது உலகின் அனைத்து போராளிகளுக்கும் பொருந்தும் மன்னா 🙂

 

 

தெனாலிராமா உனது வருகையை கோலாகலமாகக் கொண்டாட வேண்டும்!

 

(கொஞ்சம் இந்திரலோகத்தில் அழகப்பன் வாடை அடிக்கிதோ? 😦  … இருக்காதுன்னு நம்புவோம்!)

தமிழனென்று சொல்லடா.. March 18, 2014

Posted by anubaviraja in அரசியல், கவிதை, தமிழ்.
Tags: , , , , ,
add a comment

குடிமகன்

குறிஞ்சியிலே வெடி வெடித்து மலைகளெல்லாம் மாயமாம்..

முல்லையிலே மரமறுத்து சிறு பறவையும் காணோமாம்..

மருதமெங்கும் எரிவாயுக்கு வயலெல்லாம் வேணுமாம்..

உயிரோடு கடலாடி போய்வரல்  நெய்தலெங்கும் தான் அரிதாம்..

காணி நிலம் கிடையாது  பாரதி .. இனி உன் நாடு பாலை நிலம் தான்..

மாண்புமிக்க தமிழினத்தில்..இப்போது வந்து பிறந்ததால்…

மதுபான மணம் தவிர வேறெதுவும் யாமறியோம் பராபரமே…

புன்னகையில் புது உலகம் May 18, 2013

Posted by anubaviraja in Uncategorized.
1 comment so far

முன் குறிப்பு: இந்த பதிவு முழுவதும் எனது புதிய Nexus 4 போன் மூலம் பதிவெற்றப் பட்டது. 😉 ஒரு விளம்பரம் 🙂

உச்சி வெயில் மண்டையை பிளக்கும் போது பேருந்து பயணம் என்பது எவ்வளவு கொடுமையானது என்பது அனுபவித்து பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும்.. அப்படி ஒரு கொடுமையான அனுபவத்தை பெற பேருந்து நிலையத்தை நோக்கி விரைந்து கொண்டு இருந்தேன்.

image

எங்கள் தெரு பிரதான சாலையில் சந்திக்கும் இடம். இரண்டு குட்டி நண்பிகள் பேசி சிரித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். கொளுத்தும் வெயிலில் இப்படி குதித்து குதுகலமாய் இரு அணில்களை போல போவதை பார்ப்பது மிகவும் இனிமையாய் இருந்தது.

வேகமாக சென்ற சைக்கிள் பிரதான சாலையை கடக்கும் போதும் கட்டுப்பாடு இல்லாமல் செல்வதை பார்த்து அதிர்ந்து நிற்ப்பதர்க்குள், அது நடந்து விட்டது.. குறுக்கே வந்த மாருதி ஆம்னி ஒரு சடன் பிரெக் அடித்து நின்றே விட்டது.. நண்பிகள் இருவரும் அதிர்ச்சி அடைந்து நிற்க்க, அந்த காருக்குள்ளே இருந்து ஒரு மத்திய வயதுக்காரர் எட்டி பார்த்தார். அவ்வளவு தான், இருவரயும் திட்டி தீர்க்க போகிறார் என்று பார்த்துக் கொண்டு இருந்தேன்..

ஆனால் பேரதிசயமாய் அவரிடமிருந்து ஒரு புன்னகை கீற்று.. “பிரேக் பிடிக்கலயா” என்று கேட்டார். இரு தோழியரும் ஆமொதிப்பாய் தலை அசைக்க, “பாத்து போகணும், சரியா?” என சொல்லிய படி காரை நகர்த்தினார். முன்னிருக்கயில் இருந்த ஒரு பெண் , அவர்களை பார்த்து புன்னகைக்க, இந்த சைக்கிள் அழகிகள் தெற்றுப் பல் தெரிய சிரிக்க, ஒரு கணம் உலகம் அவ்வளவு அழகாகிப் போனது… சிரித்துக் கொண்டே நானும் நடையை கட்டினேன். புன்னகை தான் எவ்வளவு அபாயகரமான தொற்று நோய்.:)

Spread Smiles!!

பேருந்து பயணம் – வாழ்வியல் பாடம் ் March 16, 2013

Posted by anubaviraja in நடந்தவை, மதுரை.
2 comments

முன் குறிப்பு: இந்த பதிவு முழுவதும் என்னுடைய மொபைல் போன் மூலம் எழுத பட்டு பின்னர் கணினியில் சரி பார்க்க பட்டது

சற்று முன்பு வரை கூட பதிவு எழுதும் மன நிலையில் நான் இல்லை. இப்பொழுது பேருந்தில் பயணம் செய்து கொண்டு தான் இருக்கிரேன், ஆயினும் எழுத தூண்டியவர் என் முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் நபர் தான்.

வெகு சமிபத்தில் திரைஉலகத்தயும் இணயத்தயும் சூழ்ந்து இருக்கும் ஹரிதாஸ் மற்றும் பரதேசி ஆகியன என்னுள் எற்பபடுத்தி இருக்கும் தாக்கம் அதிகம்.

வழமை போல மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து எனது சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருக்கிரேன். பேருந்தில் சற்றெ மனநலம் குன்றிய ஒருவர் , இருபது வயது இருக்கலாம்.. ஒல்லியான உடல் உருவம், கருத்த தேகம், அசவுகரியமான உடல் மொழி, அழுக்கான ஆடைகள்.. நடத்துனரால் இறக்கி விடப்படுவாறோ என எண்ணிக்கொண்டு இருந்தேன்…

image

(more…)