jump to navigation

தெய்வ திருமகள் – உணர்ச்சி குவியல்: I AM SAM டைரக்டர்க்கு கூட… July 21, 2011

Posted by anubaviraja in சினிமா, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , ,
17 comments

முதல் நாள் – முதல் ஷோ பார்த்துட்டு வந்து பசங்க படம் ரொம்ப சூப்பர் அப்படின்னு பீலிங்கொட சொன்னாங்க .. என்னடா இது இவங்க இப்படி பீல் பண்ற ஆளுங்க இல்லையே , இதுல எதாவது உள்குத்து இருக்குமோன்னு மைல்டா டவுட் ஆனேன்… ஏன்னா கந்தசாமி , ராவணன் எப்பெக்ட் 😉

சரி சக பதிவர்கள் முக்காவாசி பேர் நல்லா இருக்குன்னு வேற சொல்லிட்டாங்க … சரி ரைட் ஆனது ஆகி போச்சி , படத்த பாத்துரலாம்ன்னு முடிவு பண்ணி போயாச்சி …

 


ரொம்ப நாளைக்கு அப்புறம், ரங் தே பசந்தி படத்துக்கு அப்புறமா என்னோட மனச கனக்க வச்ச கிளைமாக்ஸ் தெய்வ திருமகள் படத்தொடது… இந்த வாரணம் ஆயிரம் … மதராச பட்டினம் , விண்ணை தாண்டி வருவாயா … இப்படி பட்ட படத்தயேல்லாம் பார்த்துட்டு நெறைய பேர் பீலிங்க்ஸ்சொட சுத்திகிட்டு இருந்தங்கள்ள ?? அந்த மாதிரி இந்த படத்த பார்த்ததும் எனக்கு ஒரு பீலிங்க்ஸ் … படம் நம்முடைய, குடும்ப உறவு , பாசம் , இது மாதிரியான செண்டிமெண்ட் விசயங்களுக்குள்ள புகுந்து விளையாடுரதுனால நம்ப கலைஞர் பாணியில “கண்கள் பணித்தது .. இதயம் இனித்தது ” அப்படின்னும் சொல்லலாம் ..

 

(more…)

கோ படமும் – மதுரை ஏன் இப்படி இருக்கு? May 5, 2011

Posted by anubaviraja in நடந்தவை, மதுரை.
Tags: , , , , , , , ,
16 comments

கோ படத்துக்கு மொத நாளே போயிட்டு வந்தாச்சி … ஆனா இப்போ அது மேட்டர் கெடயாது …. இந்த படத்துல ஒரு ஈரோயினி நடிச்சிருகாங்களே அவங்க அம்மா தான் நம்ப பழைய ராதாவாம். அதுக்கென்ன ? அதான் எல்லாருக்கும் தெரியுமே அப்படின்னு சொல்றிங்களா ?? இருங்க … ஏன் இந்த அவசரம் விசயத்துக்கு வரேன் … இப்போ கீழ இருக்குற படத்த நல்லா பாருங்க …

இப்போ சொல்லுங்க – எங்க ஆபீஸ்க்கு எதிர்க்க இருக்குற தியேட்டர் ல இந்த பேனர் வச்சிருக்காங்களே .. இத எப்படி ஒரு மனுஷன் கண் கொண்டு பாக்குறது ?? … என்ன கொடுமை சார் இது 😦 😦

no nation is perfect, but has to be made perfect August 15, 2009

Posted by anubaviraja in சினிமா, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , , ,
4 comments

எல்லாருக்கும் வணக்கம் ப்லாக் பக்கம்  பார்த்து ரொம்ப நாள் ஆச்சி … என்னங்க பண்றது கொஞ்சம் வேலை ஜாஸ்தி. இன்னிக்கு தான் நிம்மதியா ஒக்காந்து டைப் பண்ணுறதுக்கு நேரம் கெடைச்சது . சுதந்திர தினம் 🙂 ……. நல்லா தான் போய்கிட்டு இருக்கு. குசேலன் (ஷப்பா…) நடிகைகளோட பேட்டி அப்படின்னு பார்த்து நேரத்த போக்கிருப்பிங்க. ரொம்ப நாள சொல்லனுமுன்னு  நினைச்ச ஒரு விஷயம் மனசுல நிக்கிது அத இன்னிக்கு சொல்லிடறேன்.

நான் சென்னை வந்தப்ப ஒரு ஹிந்தி படம் கூட பார்த்தது கெடயாது . வந்ததும் கொஞ்ச நாள் வேலை தேடிக்கிட்டு இருந்தேனா , அப்போ பொழுது போகாம இருந்த சமயத்துல எங்க ரூம்ல இருந்த நெறைய ஹிந்தி DVDய பார்த்து டரியல் ஆகி இருந்தேன் , (நமக்கும் ஹிந்திக்கும் தான் மூணாம் க்ளாஸ்ல இருந்தே ஆகாதே ..)  அப்புறம் என்னோட ரூம் மேட் தான் சப்டைட்டில் போட்டு படாத பாக்கலாம்ம்னு சொல்லி என்னோட அறிவு கண்ண தெறந்து விட்டாரு. மொதல்ல என்ன பாக்க சொன்ன படம் Rang de Basanti

சரி நம்ம மாதவனும் சித்தார்த்தும் இருக்கங்கலேன்னு நம்பி பார்க்க ஆரம்பிச்சிட்டேன். படம் பார்த்து முடிச்சோடனே , இப்படி எல்லாம் நம்ம தமிழ் டைரக்டர்கள் யோச்சிக்க மாட்டாங்களான்னு தோனுச்சி.

இங்கிலாந்துல தான்னோட தாத்தாவோட ( சுதந்திர போராட்ட காலத்துல ஜெயிலரா இருந்தவரு) டைரிய படிக்கிற பேத்தி பகத் சிங் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள பத்தி படம் எடுக்கணும்ன்னு ஆசை பட்டு இந்தியா வர்றாங்க. அப்போ அவங்களுக்கு டெல்லி யுனிவேர்சிடில இருக்குற ஒரு குரூப் friend ஆயிடறாங்க. அந்த படம் எடுக்க ஆரம்பிக்கும் போது தான் சந்திரசேகர ஆசாத், பகத்சிங், ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்பகுல்லா கான் பாத்திரங்கள்ல நடிக்க அமீர் கான், சித்தார்த் அண்ட் கோ ஒத்துகிறாங்க.

அமீர் கான் குரூப் கொஞ்சம் வித்தியாசமானது . இந்து, முசுலீம், சீக்கியர், ஓவியர், அதிவேகமாக பைக் ஓட்டுறது , பீரை குடிச்சிகிட்டே உயரத்துல இருந்து  தண்ணீரில் குதிப்பவர்கள், இப்படிப்  ஆட்டமும், பாட்டமுமாய் நாளைக் கழிப்பவர்கள் (குஷியான க்ருப்புங்கோ) . தோழியின் காதலனான மாதவன் இந்திய விமானப்படையில் பைலட்டாகப் பணியாற்றுபவர்.  இந்தக் கும்மாளத்தில் அவ்வப்போது அவரும் கலந்துக்குவாறு.

ஆரம்பத்தில் இந்த படத்தை தமாசாகக் பாக்குற  நண்பர்கள் அந்த இங்கிலாந்து பெண்ணின் தீவிரமான அக்கறையை பாத்து  வசனங்களையெல்லாம் மனப்பாடம் செஞ்சி நடிக்கிறாங்க .

கடைசில  போராளிகள் தூக்கிலிடப்படும் காட்சிகளைத் திரையில் பாக்கும்  நண்பர்கள் சில கணங்கள் உறைந்து போகிறார்கள். அப்போ மாதவன், படித்தவர்கள் இராணுவத்துக்கும், ஐ.ஏ.எஸ்ஸுக்கும், அரசியலுக்கும் வரவேண்டும் என்கிறார். படவேலைகளுக்கு இடையே ஆட்டமும், பாட்டமுமான அவர்களது கொண்டாட்ட வாழ்க்கையும் தொடருகின்றது.

ஆனால் மிக்21 விமானத்தில் பறந்த மாதவன் விபத்தில் இறந்து போக நண்பர்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை ஒரு முடிவுக்கு வருகிறது. விமானப்படையில் பல ஆண்டுகளாகப்  மிக்21 விமானங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாவது குறித்துப் புலனாய்வு செய்த என்.டி.டி.வி , தரங்குறைந்த மிக் ரக விமானங்களை வாங்கியதில் ஊழல் இருப்பதாக அறிவிக்கிறது. ஊழல் செய்த  மந்திரி விமானம் வாங்கியதில் ஊழல் ஒன்றுமில்லையெனவும், விமானம் விபத்திற்குள்ளானதற்கு பைலட்டின் தவறே காரணம் என்றும் அலட்சியமாகக் கூறுகிறார்.

ஆத்திரமடைந்த நண்பர்கள் முதன்முதலாக அரட்டைக்குப் பதிலாகக் கோபத்துடன் கூடி விவாதிக்கிறார்கள். தாங்கள் ஏற்று நடித்த புரட்சியாளர்களின் வசனங்களை இப்போது நிஜத்தில் பேசுகிறார்கள். இங்கும் ஆசாத்தும், பகத்சிங்கும், பிஸ்மில்லும் மாறி மாறி வந்து பேசுகிறார்கள். எது நிழல் எது நிஜம் என்ற பேதம் தெரியாதபடி விவாதம் நடைபெறுகிறது. இறுதியில் மந்திரியைக் கொல்வது என்று முடிவெடுக்கிறார்கள்.

அப்புறம் என்ன மந்திரி தியாகி ஆகிடறாரு….. (அரசியல்வாதிகள்னாலே தியாகிகள் தான பா ) . தங்களது கொலைக்கான நியாயம் இதன் மூலம் மறைக்கப்படுவது கண்டு கொந்தளிச்சி அதை உலகிற்குச் சொல்லுரதுன்னு   முடிவெடுக்கிறார்கள். ஒருநாள் அதிகாலையில் ஆல் இந்தியா ரேடியோவைக் கைப்பற்றி நேரடி ஒலிபரப்பில் தங்கள் தரப்பு நியாயத்தைத் தெரிவிக்கிறார்கள். தொலைபேசியில் வாழ்த்துக்களுடன் வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள். தொலைக்காட்சிகளிலும் இந்தச் சம்பவம் தலைப்புச் செய்தியாகக் காட்டப்படுகிறது.

இவங்கள  டேரரிஸ்டுன்னு    சொல்லி  அதிரடிப்படையை ஆலிந்தியா ரேடியோக்கு   அனுப்பி  நண்பர்கள் எல்லாரையும் போட்டு தள்ளிட்றாங்க . ஆவணப்படத்தில் தாங்கள் தூக்கிலிடப்படும் காட்சிகளை நினைத்தவாறே சிரிசசி கிட்டே  சாகிறாங்க . 😦

படத்துல ரெண்டு டயலாக் என்னோட மனசுள்ள நின்னது…..

மாதவனும் சித்தர்த்தும்  சொல்றது….

No nation is perfect, but has to be made perfect

ஜெயிலர் டைரில இருந்து ….

I always believed there were two kinds of men in this world, men who go to their deaths screaming, and men who go to their deaths in silence. Then I met a third kind.

கண்டிப்பா அந்த படத்த பாருங்க…. மிஸ் பண்ணிராதிங்க …