பத்தாயிரம் ரூபாய் கட்டும் – பத்து வயசு பையனும் May 13, 2011
Posted by anubaviraja in குட்டி கதைகள், தமிழ், நகைச்சுவை.Tags: அனுபவங்கள், கதை, குட்டி, சின்ன, தத்துவம், பையன்
2 comments
குட்டி கதை சொல்லி ரொம்ப நாள் ஆகி போச்சி , இன்னிக்கு கண்டிப்பா சொல்லி தான் ஆகணும் … மேல படிங்க … (அட மேலன்னா மேல பார்க்கப்டாது… )
ஒரு ஊருல ஒரு பேங்க் இருந்திச்சாம் .. அந்த பேங்க்ல பணம் கட்ட போன ஒருத்தர் அவரோட பையனையும் கூட கூட்டிட்டு போயிருக்கார்
அந்த பய திடீர்னு – ” இங்க யாரவது செகப்பு ரப்பர் பேண்ட் மாட்டின ருபாய் கட்ட கீழ போட்டிங்களா?? ” அப்படின்னு அபல குரல் எடுத்து கூவினான்….
சரி குழந்த பய தான அப்படின்னு நம்ம்ம்பி… ஒரு நாலு பேரு கைய வேற தூக்கிட்டாங்க ….
அந்த பய அப்புறம் என்ன சொன்னான் தெரியுமா ??
“அந்த செகப்பு ரப்பர் பேண்ட் என் கிட்டதான் இருக்குன்னு ” சொல்லிட்டான்மா… 😦 😦
விஷம் விஷம் ……
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் … இந்த கதைய நமக்கு SMS அனுப்பினது அருமை தம்பி மாதேஷ் தான்…. அதுனால எல்லா புகழும் அவருக்கே ….
ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் SMS வருது ? July 29, 2010
Posted by anubaviraja in குட்டி கதைகள், நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.Tags: கதை, கலாய், தத்துவம், தமிழ், பஞ்ச், SMS
11 comments
நமக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் பார்வர்ட் SMS வருதா இல்ல உங்க எல்லாருக்கும் வருதான்னு தெரியல ஆனாலும் ஒரு SMS அனுப்புரதுக்கு ஸ்ரீஹரிகோட்டா ல ராக்கெட் செய்ற அளவுக்கு யோசிச்சி அனுப்புறது தான் நம்ம ஆளுங்க வழக்கம் 🙂 🙂
கொஞ்சம் சாம்பிள் இங்க படிச்சு பார்த்தா உங்களுக்கே புரியும் ….
அம்மா : திப்பு சுல்தான் யாரு ??
பையன் : (கொஞ்சம் நேரம் யோசிச்சிட்டு ) தெரியாது ..
அம்மா : ஒழுங்கா பாடத்து மேல கவனம் வச்சா தெரியும்
பையன்: சரிம்மா புவனா யாரு ??
அம்மா : யாருடா ??
பையன்: ஒழுங்கா அப்பா மேல கவனம் வச்சிருந்தினா தெரிஞ்சிருக்கும் 😉
லேட்டஸ்ட் தற்கொலை கடிதம்
————-
————-
————-
நான் விஜய் படத்துக்கு போகிறேன் என்னை யாரும் தேட வேண்டாம்
அப்புறம் ஒரு பஞ்ச் டயலாக் :
டாப் அப் போட்டு SMS அனுப்பும் நண்பனை நம்பு
மேக் அப் போட்டு மிஸ்ட் கால் குடுக்கும் பெண்ணை நம்பாதே 🙂
அடுத்தது தான் ரொம்ப வில்லங்கமான SMS
படித்த உடன் பார்வர்ட் பண்ணவும்
அப்புறமா ?? யோவ் உண்மையிலேயே அந்த SMS ல அது மட்டும் தான் யா இருந்தது
அப்புறம் கடைசியா :
கண்கள் பேசும் வார்த்தைகளுக்கு ஆயிரம் அர்த்தம்
உதாரணத்துக்கு
நீங்க ஒரு பொண்ண பார்த்து சிரிக்கிரிங்க அப்போ
அந்த பொண்ணு
அப்படியே வானத்த பார்த்தா – இந்த மூஞ்சிக்கு லவ் ஒண்ணு தான் கொறைச்சல்ல்ன்னு அர்த்தம்
கால பார்த்தானா – உங்களுக்கு செருப்படி நிச்சயம்
சைடுல பார்த்தா – அவ அப்பன் வெப்பனோட வரான்னு அர்த்தம்
உங்கள பார்த்து சிரிச்சா – உங்களுக்கு குவாட்டர் கன்பார்ம் 😉
சிரிச்சதேல்லாம் போதும் போய் வேலைய பாருங்க .. என்னது சிரிப்பு வரலையா ?? அப்போ நான் நெக்ஸ்ட் மீட் பண்றேன்…. வர்ட்டா …
பின் குறிப்பு : இதுல நெறைய SMS பார்வர்ட் பண்ணது அன்பு தம்பி மாதேஷ் அவருக்கு என்னோட நன்றி .. (இதெல்லாம் சொல்லன்னும்ல பா 😉 )
SMS ல வந்த வில்லங்கமான கதை… April 3, 2010
Posted by anubaviraja in நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.Tags: கதை, பொண்டாட்டி, SMS
add a comment
அப்புறம் இந்த பயபுள்ளைக சும்மா இருக்காம நமக்கு SMS ல கதை எல்லாம் அனுப்பி கிட்டு இருக்குறாங்க. என்னோட போன்ல 50 SMS ஸ்டோர் பண்ணுறதுக்கு தான் option இருக்கு .. என்ன செய்றது இந்த மாதிரி கலக்கலான SMS எல்லாம் வந்தா DELETE பண்ண மனசு இல்லாம இன்பாக்ஸ் நிரம்பி வழியுது 🙂
கதை 1 :
எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் , ரெண்டு பேர் கூட்டத்துல அவங்க பொண்டாடிய காணோம்ன்னு தேடி கிட்டு இருக்காங்க .. அதுல முதல் நபர் கேக்குறார் “உங்க பொண்டாட்டி எப்படிங்க இருப்பாங்க”??
இன்னொருத்தர் பதில் சொல்லுறார் “சிகப்பா , ஒல்லியா, நல்ல ஸ்டைலா கும்முன்னு இருப்பா … சுருக்கமா சொன்னா அவ ஒரு சூப்பர் பிகர் ( 😉 கடைசி வரி தலைவர் டைலாக் ) ஆமா உங்க பொண்டாட்டி எப்படி இருப்பாங்க ?? ”
அடுக்கு அவர் சொன்னாரு ” அவல பத்தி இப்போ என்ன சார் பேச்சு .. வாங்க முதல்ல உங்க பொண்டாட்டிய தேடுவோம் ”
இது எப்படி இருக்கு ??? .. இன்னொரு கதையோட நாளைக்கு சந்திப்போம் …
வைப்பற்றங்கரையிலிருந்து கூவம் நதியோரம் வரை…. March 1, 2009
Posted by anubaviraja in சினிமா, நடந்தவை.Tags: எம் மகன், கதை, கூவம், சாத்தூர், வாழ்க்கை, வைப்பற்றங்கரை, yes we can
7 comments
எல்லோர்க்கும் வணக்கம். ஒரு கதை சொல்லலாம்னு இருக்குறேன் ( அட கதைனதுமே எந்திரிச்சி போகப்டாது ). இது ஒரு வாழ்க்கை STD ( STD னா வரலாறு தான? ) .
என்னோட வாழ்கைய பத்தி உங்க கிட்ட பகிர்ந்துக்க ஆசை படுறேன். சாத்தூர் .. சிவகாசி பக்கத்துல கிராமம்னும் சொல்ல முடியாம நகரம்னும் சொல்லமுடியாத ஒரு டவுன். வெயில் படத்துல வரது எங்க ஊரோட சுற்று வட்டாரம் தான். தீப்பெட்டி, பட்டாசு, இது ரெண்டு மட்டும் தான் எங்க ஊரோட பிழைப்புக்கான வழி.
15 வயசு வரைக்கும் என்னோட வாழ்க்கை மிக மிக ஆனந்தமா போய்கிட்டு இருந்திச்சி. நாடக மேடைகள் ,கவிதை போட்டிகள், பட்டிமன்றம் , கட்டுரை எழுதுவது அப்படின்னு ஒரு மெட்ரிகுலேசன் ஸ்கூல் பையன் செய்ய கூடாத வேலைல எல்லாம் ஆர்வமா இருந்தேன்.
ஒன்பதாம் வகுப்பு முடிச்ச உடனே ரிசல்டும் கூடவே வந்தது கிளாசிலேயே 3rd ரேங்க் வாங்கி இருந்தேன். முதல் சோகம் ஆரம்பித்தது. அப்பாவுக்கு மளிகை கடைல 5 லட்ச ருபாய் நஷ்டம். மற்ற ஆட்களை கல்லாவில நம்பி விட்டுட்டு போனதுனால…
ரெண்டாவது சோகம்.. படிப்ப நிப்பாட்டிட்டு கடைக்கு வேலைக்கு போனேன். ஆரம்பத்துல ரொம்ப கஷ்டமா தான் இருந்திச்சி. அப்புறம் சரி இது ஒரு சவால் அப்படின்னு நெனைச்துகப்புரம் வாழ்க்கை அமைதியா போய்கிட்டு இருந்தது.
எங்க அப்பா வியாபாரத்தில ரொம்ப திறமைசாலி. பேச ஆரம்பிச்சாங்க னா நீங்க அந்த பொருளை வாங்காம போக மாட்டிங்க. பட் ரொம்ப கோபம் ஜாஸ்தி. “எம் மகன்” படத்துல வர நாசர் கேரக்டர். அந்த படம் என்னோட லைப்… அந்த டைரேக்டருக்கு என்னோட கதை எப்படி தெரியும்னு தெரியல . ( பரத் பல காட்சிகள்ல அவமான படுறது , அம்மா கரெக்டர் நாசருக்கு பயபடுறது , இளைய தாய் மாமா வந்து கொஞ்ச நாள் கடைய பார்த்துகிட்டது, அப்பாவுக்கு பிடிக்காத மாமா விட்டுக்கு நானும் அம்மாவும் ஒளிஞ்சு ஒளிஞ்சு போயிடு வந்தது … எல்லாம் என்னோட வாழ்க்கை ) என்ன… கோபிகா கேரக்டர் மட்டும் ஏன் லைபில இல்லை ??? 🙂
எனக்கு படிக்கிரதுனா ரொம்ப பிடிக்கும் அதுனால எப்டியாவது படிச்சே ஆகனும்னு யோசிச்சேன். அப்போ தான் கிடைச்சது ப்ரைவேடா 10 th அப்புறம் +2 எளுதலம்ங்க்ற ஐடியா. சரின்னு படிக்க ஆரம்பிச்சேன். கடையில கூட்டம் இல்லாத நேரம் படிப்பு தான் 🙂
அப்புறம் நைட் கூட 11 மணிக்கு பிறகு கடை பூட்டிட்டு வந்து படிக்குறது.
10 th அப்புறம் +2 ஓரளவு நல்ல மார்க் எடுத்தே பாஸ் பண்ணிட்டேன். கடையும் நல்ல படியா போக ஆரம்பிச்சது. கடன் எல்லாம் அடைய ஆரம்பிச்சது. சரி அப்படியே BBA மதுரை காமராஜ் university ல தபால் மூலமா படிக்க ஆரம்பிச்சேன். அதயும் முடிச்சி MBA வும் முடிச்சிட்டேன், எங்க கடையும் நல்ல படியா வந்துருச்சி.
10 வருஷ மளிகை கடை அனுபவம் Distance education ல கிடைச்ச MBA டிகிரி , இதோட சென்னைக்கு ட்ரைன் ஏறி வந்தேன். வேலை கிடைக்கலைனா மளிகை கடை வச்சி பிழைச்சிக்கலாம் இல்லையா ? 🙂
என்னோட பெரியம்மா பையன் (He is My god or God father ) நம்பிக்கை ஏற்படுத்தி என்னை சென்னையில வாழ வைத்தான்.
அதனால (நீதி சொல்லுற நேரம் வந்துரிச்சி 😉 ) முடியாதுன்னு நெனைச்சிருந்தா நான் இன்னிக்கும் மளிகை கடையில பொட்டலம் மடிச்சு கிட்டு இருந்திருப்பேன்.
அதுனால ஒபாமா சொன்ன மாதிரி “yes we can” அப்டின்னு நெனைப்போம். கலாம் சொன்ன மாதிரி கனவு காண்போம்.
(காமெடியா தான் ஆரம்பிச்சேன் ஆனா முடியல 🙂 )
நான் பெரிசா எதுவும் சாதிக்கலை . என்னோட வாழ்கைல துன்பம் வந்த பொழுதெல்லாம் “I Just stayed Positive” . மற்றதெல்லாம் தானா நடந்தது. இந்த ஒரு விசயத்த என்னோட நண்பர்கள் கிட்ட பகிர்ந்துக்க நெனச்சேன் அது நாலா தான் போஸ்ட் பண்ணினேன்.
ஆனா என்னோட அப்பாவ ஒரு பெரிய வில்லனா காட்டி இருந்துச்சின்னா , அது உண்மை கிடையாது. அவரு ஒரு நேர்மையான, இரக்கமுள்ள, 3 தடவை பிச்னஸ்ல தோற்று நாலாவது தடவை ஜெயிச்ச ஒரு முன்கோபகார ஆசாமி. “Many good things that I have, I have learn from him”. ( என்ன, குடுத்த வாக்கையும் குடுத்த கடனையும் திருப்பி வாங்குற பழக்கம் இல்லாததுனால 3 தடவை பிச்னஸ்ல லாஸ் 🙂 )