jump to navigation

இருளில் கிடைத்த வெளிச்சம் .. February 17, 2012

Posted by anubaviraja in கவிதை, தமிழ், நடந்தவை, மதுரை.
Tags: ,
2 comments

ராத்திரி ஒரு மணிக்கு கரண்ட் போச்சின்ன இப்படி கவிதை எழுதி உங்கள தான் இம்சை பண்ண தோணுது … வேற என்ன பண்றது ?? 😉
யாழிசை பாடும் சிறுசிறகாய்
நின் கானம் காதினில் ஒலித்திடவே…அறை நிறை ஒளி தரும் சிறு மெழுகாய் ..
மின்மினி போல் நீ மிளிர்ந்திடவே..

நெற்றியில் நிறைந்த வியர்வை துளி
ஆண்டு பல சென்று தரை விழவே…

இரைச்சல் சத்தம் இல்லாத
அமைதி மீண்டு எனை சேர்ந்திடவே…

ஆவன செய்த மின் வாரியமே
வாழிய வாழிய நின் மக்கட் பணியே…

பாரத சமுதாயம் வாழ்கவே!
ஜெய ஜெய (ஜெயா).. பாரத சமுதாயம் வாழ்கவே!