நித்யானந்தா.. தோனி .. சானியா.. சசி தரூர் .. மற்றும் பலர் May 5, 2010
Posted by anubaviraja in கிரிக்கெட், சினிமா, தலை, நகைச்சுவை, ரசித்தவை.Tags: அமீர் கான், கலாய், கிரிக்கெட், சசி தரூர், சானியா, சுறா, தோனி, நித்தியானந்தா, நித்யானந்தா, லலித் மோடி, விஜய், IPL, Twitter
3 comments
என்னடா தலைப்பு ஒரு மாதிரியா இருக்கேன்னு பாக்குரிங்கலா?? ஒண்ணுமில்லை சும்மா நமக்கு ரிசெண்டா பிடிச்ச செய்திகள பத்தி ஒரு Mixed பதிவு …
சென்னை சூப்பர் கிங்க்ஸ் IPL சாம்பியன்:
ஒரு வழியா மூணு செமி பைனல் பார்த்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் டீம் கோப்பைய வாங்கிட்டாங்க …. (ஒரு வேளை “அதிகமா அடிவாங்குனது நாங்க தான் … அதுனால கோப்பை எங்களுக்கு தான் சொந்தம்” அப்படின்னு தலை பாணில பேசி தோனி கப்ப வாங்கிட்டு வ்ந்துட்டரோ ??? )எனக்கு என்னோமோ ரொம்ப சந்தேகமா தான் இருக்கு … பிரெண்ட் ஒருத்தர் சொன்னாரு …
- ரைனாவுக்கு ரெண்டு கேட்ச் மிஸ் பண்ணங்க
- மும்பை டீமோட பீடிங் படு மட்டம்
- ஹர்பஜன் மூணாவதா ஏறங்கினது
- போலார்ட் லேட்டா ஏறங்கினது
இப்படி பல காரணம் …. IPL பல்லாயிரக்கணக்கான கோடி ருபாய் புழங்குது அப்படிங்கறப்பவே நான் மைல்டா டவுட் ஆனேன் 😉 . வினவோட இந்த பதிவ படிச்சி பாருங்க .. கிரிக்கெட்டே வெறுத்து போகும்.. என்னது நான் இப்போ எனா பண்றேனா ? crickinfo சைட்ல 20-20 ஸ்கோர் பார்த்துகிட்டு இருக்கேன் .. ஹி ஹி ஹி …
20-20 உலகக் கோப்பை: சூப்பர் 8-ல் இந்தியா:
ஒரு வழியா இந்த தடவை ரன் ரேட் … கடைசி பால் வரைக்கும் போராடுறது .. இப்படி எதுவுமே இல்லாம அடுத்த ரௌண்டுக்குள்ள போய்ட்டாங்க…. ஹ்ம்ம் … பார்க்கலாம் இந்தத்தடவை எப்படின்னு ..
ரைனா சூப்பர் பார்ம்ல இருக்கார் .. யுவராஜ் மட்டும் கொஞ்சம் கை குடுத்தா போதும் கோப்பை நமக்கு தான் …
சுறா……………….
பாவம் பா அந்த பச்சை புள்ளை .. அவருக்கு என்ன வருமோ அத மட்டும் செஞ்சிட்டு போறாரு .. அதுக்கு அவர குத்தம் சொல்லி என்ன பண்ணுறது … “அந்த கொழந்தையே நீங்க தான் சார் ” அப்படிங்கற ரேஞ்சில பில்ட் அப் குடுக்குற டைரக்டர்களை மொதல்ல டிக்கெட் எடுத்து சஹாரா பாய்வனதுக்கு அனுப்பி விடனும் .. ஏன்னா இங்க வெயில் கம்மியா இருக்கு பாருங்க … 😉
இருந்தாலும் எனக்கு இன்னொரு விசயத கேள்விபட்டதுல இருந்து ரெண்டு வாரமா சரியா தூக்கமே வரலை … என்னன்னா 3 Idiots படத்துல அமீர் கான் நடிச்ச காரெக்டர்ல விஜய் நடிக்கிராராமே ?? “என்ன கொடுமை சார் இது … ” விஜய் .. உங்க ஸ்டைல்லேயே நடிச்சிட்டு போங்களேன் … இதெல்லாம் இந்த விக்ரம் , சூர்யா , இத மாதிரி சின்ன பசங்க நடிச்சிட்டு போகட்டுமே .. ப்ளீஸ்
சானியா பொண்ணுக்கு கல்யாணம் ஆயிரிச்சி:
ரைட் விடும்மா .. இனிமே நீ என் தங்கச்சி மாதிரி … அப்புறம் எனக்கு ஒரே ஒரு டவுட் … ஷோயப் மாலிக் கிட்ட உனக்கு பிடிச்ச விஷயம் என்னம்மா ?? இன்னும் கொஞ்சம் பர்சனாலிட்டியா செலக்ட் பண்ணிருக்கலாம்… எதனை பேரு சிக்ஸ் பாக்ஸ் வச்சிக்கிட்டு கும்முன்னு சுத்திகிட்டு இருக்காங்க ??? சரி சரி காதல் ஹாஸ் நோ ஐஸ் 😉
சசி தரூர் – லலித் மோடி … Twitter:
இது தாங்க செம்ம காமெடி கதை .. நூறு ருபாய் திருடிணவனே தேள் கடிச்சா கத்த முடியாம நிக்கிரப்போ .. மிஸ்டர் மோடி செவனேன்னு இருந்திருக்கலாம்ல ??? எனக்கும் Twitter Account இருக்கு நானும் Twitt பண்ணுவேன்னு சசி தரூர இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கலாம்ன்னு நெனைசார்… இப்போ உன்னால நான் கெட்டேன் … என்னால நீ கெட்ட… அப்படிங்கற கதை ஆயிரிச்சி … ஒருத்தர் மந்திரி பதவி போய் உட்கார்ந்டுருக்குறார் … இன்னொருத்தர் பதவிக்கு தலைக்கு மேல கத்தி தொங்குது … அப்புறம் நமக்கு ஈன இந்த தேவை இல்லாத வேலை ?? ரைட் உங்க பதில் என்ன சொல்ல போறிங்கன்னு தெரியும் “அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் தான” 😉
Social Media அப்படின்னு சொல்ல படும் Twitter தளத்தோட பவர் என்ன அப்படிங்கறத இந்திய மக்களுக்கு இந்த நிகழ்ச்சி எடுத்து காட்டிருக்கு … FaceBook, Twitter, Orkut.. இப்படி இணையத்துல இருக்குற முக்கியமான தளங்கள் எல்லாம் இந்திய மக்களை எப்படி எல்லாம் ஆட்டிபடைக்குது அப்படின்னு கூடிய சிக்கிரம் ஒரு பதிவுல சந்திப்போம் …
பெண்கள் சிறைக்குள் நித்யானந்தா
அட ராமா .. என்னடா நடக்குது இங்க ….
எனக்கு டெஸ்ட் பண்ணி பாருங்க அப்படின்னு சொன்னார் அதுக்காகவா ??? – இருக்காது அவருதான் ரஞ்சி மேடம் குடுத்த மில்க் டிரிங்க குடிச்சிட்டு துள்ளி குதிச்சத பார்த்தோமே ..
பூஜை பண்ணுறதுக்கு வசதியா இருக்கும் அதுக்காகவா ??? – ஏங்க அவர ஜெயில்க்கு அனுப்பிருக்கிங்களா இல்லை கடவுள் சேவை பண்ணுறதுக்கு அனுப்பிருக்கிங்கலா ???
ஆண்கள் சிறையில எடம் இல்லைன்னு சொல்லுறாங்க … ஹ்ம்ம்.. நம்புவோம் .. நம்பி தான ஆகணும் 😉
no nation is perfect, but has to be made perfect August 15, 2009
Posted by anubaviraja in சினிமா, பிடித்தவை, ரசித்தவை.Tags: அமீர் கான், சுதந்திர தினம், படம், விமர்சனம், ஹிந்தி, Rang de Basanti
4 comments
எல்லாருக்கும் வணக்கம் ப்லாக் பக்கம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சி … என்னங்க பண்றது கொஞ்சம் வேலை ஜாஸ்தி. இன்னிக்கு தான் நிம்மதியா ஒக்காந்து டைப் பண்ணுறதுக்கு நேரம் கெடைச்சது . சுதந்திர தினம் 🙂 ……. நல்லா தான் போய்கிட்டு இருக்கு. குசேலன் (ஷப்பா…) நடிகைகளோட பேட்டி அப்படின்னு பார்த்து நேரத்த போக்கிருப்பிங்க. ரொம்ப நாள சொல்லனுமுன்னு நினைச்ச ஒரு விஷயம் மனசுல நிக்கிது அத இன்னிக்கு சொல்லிடறேன்.
நான் சென்னை வந்தப்ப ஒரு ஹிந்தி படம் கூட பார்த்தது கெடயாது . வந்ததும் கொஞ்ச நாள் வேலை தேடிக்கிட்டு இருந்தேனா , அப்போ பொழுது போகாம இருந்த சமயத்துல எங்க ரூம்ல இருந்த நெறைய ஹிந்தி DVDய பார்த்து டரியல் ஆகி இருந்தேன் , (நமக்கும் ஹிந்திக்கும் தான் மூணாம் க்ளாஸ்ல இருந்தே ஆகாதே ..) அப்புறம் என்னோட ரூம் மேட் தான் சப்டைட்டில் போட்டு படாத பாக்கலாம்ம்னு சொல்லி என்னோட அறிவு கண்ண தெறந்து விட்டாரு. மொதல்ல என்ன பாக்க சொன்ன படம் Rang de Basanti
சரி நம்ம மாதவனும் சித்தார்த்தும் இருக்கங்கலேன்னு நம்பி பார்க்க ஆரம்பிச்சிட்டேன். படம் பார்த்து முடிச்சோடனே , இப்படி எல்லாம் நம்ம தமிழ் டைரக்டர்கள் யோச்சிக்க மாட்டாங்களான்னு தோனுச்சி.
இங்கிலாந்துல தான்னோட தாத்தாவோட ( சுதந்திர போராட்ட காலத்துல ஜெயிலரா இருந்தவரு) டைரிய படிக்கிற பேத்தி பகத் சிங் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள பத்தி படம் எடுக்கணும்ன்னு ஆசை பட்டு இந்தியா வர்றாங்க. அப்போ அவங்களுக்கு டெல்லி யுனிவேர்சிடில இருக்குற ஒரு குரூப் friend ஆயிடறாங்க. அந்த படம் எடுக்க ஆரம்பிக்கும் போது தான் சந்திரசேகர ஆசாத், பகத்சிங், ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்பகுல்லா கான் பாத்திரங்கள்ல நடிக்க அமீர் கான், சித்தார்த் அண்ட் கோ ஒத்துகிறாங்க.
அமீர் கான் குரூப் கொஞ்சம் வித்தியாசமானது . இந்து, முசுலீம், சீக்கியர், ஓவியர், அதிவேகமாக பைக் ஓட்டுறது , பீரை குடிச்சிகிட்டே உயரத்துல இருந்து தண்ணீரில் குதிப்பவர்கள், இப்படிப் ஆட்டமும், பாட்டமுமாய் நாளைக் கழிப்பவர்கள் (குஷியான க்ருப்புங்கோ) . தோழியின் காதலனான மாதவன் இந்திய விமானப்படையில் பைலட்டாகப் பணியாற்றுபவர். இந்தக் கும்மாளத்தில் அவ்வப்போது அவரும் கலந்துக்குவாறு.
ஆரம்பத்தில் இந்த படத்தை தமாசாகக் பாக்குற நண்பர்கள் அந்த இங்கிலாந்து பெண்ணின் தீவிரமான அக்கறையை பாத்து வசனங்களையெல்லாம் மனப்பாடம் செஞ்சி நடிக்கிறாங்க .
கடைசில போராளிகள் தூக்கிலிடப்படும் காட்சிகளைத் திரையில் பாக்கும் நண்பர்கள் சில கணங்கள் உறைந்து போகிறார்கள். அப்போ மாதவன், படித்தவர்கள் இராணுவத்துக்கும், ஐ.ஏ.எஸ்ஸுக்கும், அரசியலுக்கும் வரவேண்டும் என்கிறார். படவேலைகளுக்கு இடையே ஆட்டமும், பாட்டமுமான அவர்களது கொண்டாட்ட வாழ்க்கையும் தொடருகின்றது.
ஆனால் மிக்21 விமானத்தில் பறந்த மாதவன் விபத்தில் இறந்து போக நண்பர்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை ஒரு முடிவுக்கு வருகிறது. விமானப்படையில் பல ஆண்டுகளாகப் மிக்21 விமானங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாவது குறித்துப் புலனாய்வு செய்த என்.டி.டி.வி , தரங்குறைந்த மிக் ரக விமானங்களை வாங்கியதில் ஊழல் இருப்பதாக அறிவிக்கிறது. ஊழல் செய்த மந்திரி விமானம் வாங்கியதில் ஊழல் ஒன்றுமில்லையெனவும், விமானம் விபத்திற்குள்ளானதற்கு பைலட்டின் தவறே காரணம் என்றும் அலட்சியமாகக் கூறுகிறார்.
ஆத்திரமடைந்த நண்பர்கள் முதன்முதலாக அரட்டைக்குப் பதிலாகக் கோபத்துடன் கூடி விவாதிக்கிறார்கள். தாங்கள் ஏற்று நடித்த புரட்சியாளர்களின் வசனங்களை இப்போது நிஜத்தில் பேசுகிறார்கள். இங்கும் ஆசாத்தும், பகத்சிங்கும், பிஸ்மில்லும் மாறி மாறி வந்து பேசுகிறார்கள். எது நிழல் எது நிஜம் என்ற பேதம் தெரியாதபடி விவாதம் நடைபெறுகிறது. இறுதியில் மந்திரியைக் கொல்வது என்று முடிவெடுக்கிறார்கள்.
அப்புறம் என்ன மந்திரி தியாகி ஆகிடறாரு….. (அரசியல்வாதிகள்னாலே தியாகிகள் தான பா ) . தங்களது கொலைக்கான நியாயம் இதன் மூலம் மறைக்கப்படுவது கண்டு கொந்தளிச்சி அதை உலகிற்குச் சொல்லுரதுன்னு முடிவெடுக்கிறார்கள். ஒருநாள் அதிகாலையில் ஆல் இந்தியா ரேடியோவைக் கைப்பற்றி நேரடி ஒலிபரப்பில் தங்கள் தரப்பு நியாயத்தைத் தெரிவிக்கிறார்கள். தொலைபேசியில் வாழ்த்துக்களுடன் வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள். தொலைக்காட்சிகளிலும் இந்தச் சம்பவம் தலைப்புச் செய்தியாகக் காட்டப்படுகிறது.
இவங்கள டேரரிஸ்டுன்னு சொல்லி அதிரடிப்படையை ஆலிந்தியா ரேடியோக்கு அனுப்பி நண்பர்கள் எல்லாரையும் போட்டு தள்ளிட்றாங்க . ஆவணப்படத்தில் தாங்கள் தூக்கிலிடப்படும் காட்சிகளை நினைத்தவாறே சிரிசசி கிட்டே சாகிறாங்க . 😦
படத்துல ரெண்டு டயலாக் என்னோட மனசுள்ள நின்னது…..
மாதவனும் சித்தர்த்தும் சொல்றது….
No nation is perfect, but has to be made perfect
ஜெயிலர் டைரில இருந்து ….
I always believed there were two kinds of men in this world, men who go to their deaths screaming, and men who go to their deaths in silence. Then I met a third kind.
கண்டிப்பா அந்த படத்த பாருங்க…. மிஸ் பண்ணிராதிங்க …