jump to navigation

சென்னை நகரம்.. அதிவேக சாலை.. திடுமென தோன்றும் தேவதைகள் .. June 28, 2011

Posted by anubaviraja in சென்னை, நடந்தவை.
7 comments

செப்டம்பர், 2007 –  சென்னை மண்ணில் வேலை தேடி அலைந்து திரிந்து கொண்டிருந்த காலம்… ஸ்டெல்லா மேரிஸ்  கல்லூரிக்கு எதிர்த்த  நிறுத்த பேருந்தில் நின்று இன்னிக்கு இண்டர்வ்யுல என்ன சொதப்புனேன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன். ரெண்டு பொண்ணுங்க ரொம்ப தீவிரமா எத பத்தியோ பேசிகிட்டு இருந்தாங்க… நாம சென்னைக்கு போன புதுசு வேற .. ஏற்கனவே  ஒரு இண்டர்வ்யுல பிரஸ்ட் ரவுண்டுல கேள்வி கேட்டுகிட்டு இருந்த HR பொண்ணு பிரேக்ல கான்டீன்ல எல்லார் முன்னாடியும் தம் அடிச்சி கிட்டு இருந்தத பார்த்து பயந்து போய் ரெண்டாவது ரவுண்டு இண்டர்வ்யு சொதப்பின காலம் ..   அதுனால  முடிஞ்ச வரைக்கும் வேற பக்கம் திரும்பி நம்பள நம்பி எவன் வேலை குடுக்க போறான்னு விதி மேல பாரத்த போட்டு யோசிச்சிகிட்டு நின்னு கிட்டு இருந்தேன் …

திடீரென்று ஒரு வயசான அம்மா அந்த பொண்ணுங்க கிட்ட போய் நின்னாங்க ..  ஒரு பொண்ணு என்ன ன்னு கேட்டது … ஆனா அந்த பொண்ணுக்கு தமிழ் தெரியாது போல … அந்தம்மா என்ன சொல்றாங்க ன்னு புரிஞ்சிக்க முடியல. என்னோட காதுல விழுந்த வரைக்கும் அந்தம்மா DMS எப்படி போகணும்ன்னு கேட்டு கிட்டு இருந்தாங்க .. அப்போ அந்த இன்னொரு பொண்ணு (அந்த பொண்ணுக்கு தமிழ் தெரியும் போல இருக்கு … ) அது அடுத்த ஸ்டாப் தான் பாட்டிமா .. அப்படின்னு சொன்னங்க..  திடிர்ன்னு அந்தம்மா , அந்த பொண்ணோட கைய்ய பிடிசிகிச்சி.. கொஞ்சம் ஆர்வம் தலை தூக்க … என்ன நடக்குதுன்னு உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சேன் ..

அப்போ தான் அந்த அம்மா கண் பார்வை இல்லாதவங்க அப்படின்னு தெரிஞ்சுது ! DMS க்கு பஸ் ஏற எதிர் பக்கம்  போய் நிக்கணும்ன்னு இந்த பொண்ணு யோசிக்க … அந்த தமிழ் தெரியாத பொண்ணு டக்குன்னு அந்த பாட்டிம்மாவோட கைய பிடிச்சி ரோடு கிராஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க … இன்னொரு பொண்ணு கொஞ்சம் நேரம் யோசனை பண்ண மாதிரி தெரிஞ்சது .. அப்புறம் அந்த பாட்டியோட இன்னொரு கைய பிடிச்சி நடக்க ஆரம்பிச்சிட்டாங்க …

 

(more…)

Source Code – சூப்பரா ஓடும் ரயில்.. June 8, 2011

Posted by anubaviraja in சினிமா, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
5 comments

ரொம்ப நாளைக்கு அப்புறமா ஒரு இங்கிலீஷ் படம் … அதுவும் நானா பார்க்கல நம்ப நண்பர் ஒருத்தர் சொன்னாருன்னு டவுன்லோட் பண்ணி வச்சாச்சி … இருந்தாலும் கூட ஒரு ரெண்டு நாளா பார்க்கல …

அப்புறம் ஒரு நாள் திடீர்ன்னு சும்மா கம்ப்யூட்டர் ல இருக்குற குப்பையை எல்லாம் பெருக்கி ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்பி கிட்டு இருக்கும் போது இந்த படம் எத்தேட்சயா கண்ணுல பட்டது.. ரைட்டு இன்னிக்கு பாத்துடலாம்ன்னு முடிவு பண்ணி … நாம தான் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா நம்ப பேச்சை நாமலே கேக்க மாட்டோமே …. பார்க்க ஆரம்பிச்சாச்சி…

(more…)