தமிழனென்று சொல்லடா.. March 18, 2014
Posted by anubaviraja in அரசியல், கவிதை, தமிழ்.Tags: அரசியல், கவிதை, குறிஞ்சி, தமிழகம், தமிழன், முல்லை
add a comment
குறிஞ்சியிலே வெடி வெடித்து மலைகளெல்லாம் மாயமாம்..
முல்லையிலே மரமறுத்து சிறு பறவையும் காணோமாம்..
மருதமெங்கும் எரிவாயுக்கு வயலெல்லாம் வேணுமாம்..
உயிரோடு கடலாடி போய்வரல் நெய்தலெங்கும் தான் அரிதாம்..
காணி நிலம் கிடையாது பாரதி .. இனி உன் நாடு பாலை நிலம் தான்..
மாண்புமிக்க தமிழினத்தில்..இப்போது வந்து பிறந்ததால்…
மதுபான மணம் தவிர வேறெதுவும் யாமறியோம் பராபரமே…